Breaking News

"விடப்போகிறீர்களா அல்லது அதிரடிப்படையை குவிக்கவா?" தமிழரோடு முறுகிய பொலிஸாா்!

வடமராட்சியில் தமிழ் மீனவர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தென்னி லங்கை மீனவர்கள் பொலிஸாரினால் பல வந்தமாக விடுவிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனால் அப் பகுதியில் சிறிது நேரம் பதற்ற மான சூழ்நிலை காணப்பட்டுள்ளது.

வடமராட்சி பருத்தித்துறையில் தடு த்து வைக்கப்பட்டிருந்த மீனவர்களை தம் மிடம் ஒப்படைக்க வேண்டுமென பொலிஸார் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் அவர்களை ஒப்படைக்க முடியாதென்றும் தமது கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டுமென் றும் வடமராட்சி மீனவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனா்.

 இந் நிலையில் அங்கு வந்த காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடாதுவிடின்  விசேட அதிரடிப்படையின ரைக் களமிறக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதனால் மேலும் குழப்பம் அதிகரித்ததுடன் பொலிஸ் மற்றும் அப் பகுதி மீன வர்களுக்கிடையே முரண்பாடுகளும் ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவியதை யடுத்து அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டுப் பேர்களில் ஆறு பேரை பல வந்தமாக பொலிஸார் மீட்டுச் சென்றதுடன் ஏனைய இரண்டு பேரை அவர்க ளால் மீட்க முடியவில்லை.

 எவ்வாறாயினும் அங்குள்ள அருட்தந்தை ஒருவர் மூலமாக ஏனைய இரண்டு பேரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா்.