Breaking News

கொலைக்களமாக மாறும் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. !

பிரித்தானியாவில் நடைபெற்ற கத்திக் குத்து தாக்குதலில் நபர் ஒருவர் உயி ரிழந்துள்ளாா். 

லண்டனில் நேற்றிரவு நடைபெற்ற கத்திக் குத்து தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்று மொரு இளைஞன் காயம் அடைந் துள்ளார். சம்பவத்தில் 23 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ள தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

22 வயதான இளைஞர் ஒருவர் காய மடைந்துள்ள நிலையில், ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், இதுவரையில் எவரும் கைது செய்யப் படவில்லை.

இச் சம்பவம் நடைபெற முன்னர் குறித்த பகுதியில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இச் சம்பவத்திலும் இளைஞர் ஒருவர் படுகாய மடைந்துள்ளார்.

பிரித்தானியாவில் அண்மைக்காலமாக அதிகளவான குற்றச் செயல்கள் மற் றும் கத்திக் குத்து தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரி வித்துள்ளனர்.

இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 100 பேருக்கு அதிகமானோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இது மிகப்பெரிய அதிகரிப்பு என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட 100 பேரிற்குள் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.