Breaking News

தமிழக 10 போ் மீனவர்கள் கைது.!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமான முறை யில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 தமிழக மீனவர்கள‍ை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனா்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் தமி ழகத்தின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந் தவர்கள் ஆவர். நேற்று நெடுந்தீவு கடல் பகுதியில் வைத்தே இவர்களை கைது செய்த கடற்படையினர் இவர்கள் பய ணித்த இரண்டு படகுகளையும் கைப்பற்றி யுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை கங்கேசன்துறை கடற்படை முகாமில் தடு த்து வைத்துள்ள கடற்படையினர், இன்று அவர்களை ஊர்காவற்றுறை நீதிமன் றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனா்.