Breaking News

இக்கட்டான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் கூட்டமைப்பின் அதிரடி தீர்வு.!

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு இரு தரப்பும் கடும் பிரயத்தனங்களை முன்னெடுத்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆத ரவை உறுதிப்படுத்திக் கொள்வதற் காக இரண்டு தரப்புக்களும் தொடர்ச்சி யாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேச்சுக்களைத் தொடுத்துள்ளனா்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல் வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலர் மகிந்த அமரவீர ஆகியோரை எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தனை நேரில் சந்தித்துள்ளனர்.

இதன்போது, “நீங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் பிரதமர் மஹி ந்த ராஜபக்ஷ ஆராய்ந்து வருகின்றார். கூட்டமைப்பின் ஆதரவு எங்களுக்கு அவசியம்“ எனத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அலைபேசி ஊடாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் நேற்றைய தின மும் கலந்துரையாடியுள்ளனா்.

தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உத்தரவாதம் வழங்கி னால் ஆதரவு வழங்குவதாக இரு தரப்பினரிடமும் தான் தெரிவித்ததாக சம்பந்தன் தெரிவித்துள்ளாா்.