Breaking News

அரசமைப்பிற்கான தீர்வை காணுங்கள் சிறிசேனவிடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை.!

இலங்கையின் அரசமைப்பை மதிக்கும் தீர்வொன்றை காணுமாறு ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ள தாக ஐரோப்பிய ஓன்றியத்தின் பேச்சாளர் அறிக்கையொன்றில் தெரிவித்துள் ளாா்.

இலங்கையின் அரசமைப்பை மதிக் கும் தீர்வொன்றை விரைவில் காண வேண்டும் என்பதை வலியுறுத்துவ தற்காக இலங்கையின் ஏனைய சர்வ தேச சகாக்களுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று ஐரோப்பிய ஒன் றியத்தின் தூதுவர் நேற்று சந்தித்தார் என ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும், இதன் மூலம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் கடமைகளை நிறை வேற்ற முடியுமென ஐரோப்பிய ஓன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது நிச்சயமற்ற தன்மை பதட்டமும் காணப்படுகின்ற நிலையில் வன்முறையை தவிர்ப்பதும் சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினர் மிகவும் பொறுமையுடன் செயற்படுவதும் மிகவும் முக்கியமானது எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கை மக்களின் முழுமையான நன்மைக்காக நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை நோக்கிய சாதகமான பயணத்தை இலங்கை மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.