Breaking News

கடற்படை சிப்பாய் சடலமாக மீட்பு - யாழில்

யாழ். காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் கடற்படை முகாமின் ஆயுத களஞ்சிய நுழைவாசலுக்கு அருகில் இருந்து நேற்றைய தினம் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் அனுராதபுரத்தை சேர்ந்த 19 வயதுடைய அபயரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறி த்த சிப்பாய் தனது துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து கண்டறி யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நிலையில் இது தொடர்ந்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப் பட்டு வருவதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத் தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.