Breaking News

கொடுமையிலும் கொடுமை; ஐந்து குழந்தைகளை கிணற்றுள் வீசிய தாய்.!

ஐந்து குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு தானும் தற்கொலை செய்யும் நோக்கத்துடன் கிணற்றில் குதித்த பெண் மீட்கப்பட்டுள்ளா். 

இதில் நான்கு குழந்தைகள் உயிரிழந் ததாகவும் குறித்த பெண்ணும் அவரது மூத்த பெண்ணும் காப்பாறபட்டுள்ள தாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தி யாவின் குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்திலுள்ள பாஞ்ச்பிப்லா கிரா மத்திலேயே இச் சோகம் நடைபெற் றுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த கீதா பாலியா எனும் பெண் தனது ஐந்து குழந்தை களுடன் வறுமையின் பிடியில் சிக்கியிருந்ததாகவும் இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு கிணற்றில் தனது ஐந்து குழந்தைகளையும் வீசி விட்டு தானும் குதித்துள்ளாா். 

இதனையடுத்து கிராமவாசிகள் சிலர், இவர்களைக் காப்பாற்றும் நோக்கத்தில் கிணற்றில் குதித்தனர். ஆனாலும் சம்பவத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். கீதா பாலியாவும், 10 வயதான மூத்த மகள் தர்மிஸ்தாவுமே உயிருடன் மீட் கப்பட்டுள்ளனா்.

கீதா பாலியாவை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, ”கடந்த 2 ஆண்டுகளாக வறுமையின் பிடியில் சிக்கி, சாப்பாட்டுக்கும் வழியில் லாமல் தவித்த நிலையில், கெட்ட ஆவியின் தூண்டுதலால் தான் பிள்ளை களை கிணற்றில் வீசிவிட்டு, நானும் குதித்தேன்” எனத் தெரிவித்துள்ளாா்.