Breaking News

மஹிந்த ராஜபக்‌ஷவின் சூளுரைப்பு.!

பிரதமர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீடுகளை யாராலும் நிறுத்த முடியா தென பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ சற்று முன்னர் சூளுரைத்துள்ளார்.

அப்படி ஒரு நிலை வருமாயின் அனைவரும் நீதிமன்றத்தின் தீர்வு வரும்வரை காத்திருக்க வேண்டும் எனவும் சபாநாயகர் கரு ஜெயசூரிய செய்வது சட்ட விரோதமென மஹிந்த தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யின் நாடாளுமன்ற குழுக் கூட்டத் தில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.  இதேவேளை, சபாநாயகரின் கட்சித் தலைவர்கள் கூட் டத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சித் தலைவர்கள் பகீஸ் கரித்திருந்துள்ளனா்.