Breaking News

சம்மந்தன் பதவிக்கு ஆபத்து நேரிடலாம் பரபரப்பு அரசியல் வட்டாரங்கள்.!

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்றைய தினம் கூடவுள்ள நிலையில் தென்னி லங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் வகிக்கும் எதிர்க் கட் சித் தலைவர் பதவியைப் பெறும் விட யத்தில் கடும் பிரயத்தனமான முயற் சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  பிர தமராக பதவியேற்ற ரணில் விக்கிர மசிங்க தலைமையில் அமைச்சரவை அமையவுள்ள நிலையில் ஐக்கிய மக் கள் சுதந்திர முன்னணி தலைமையி லான எதிர்க்கட்சி அமையவேண்டும் என்ற நிலை ஆர்ப்பரித்துள்ளது.

குறிப்பாக, அரசமைப்பதற்காக நாடாளுமன்றில் ரணில் தலைமையிலான ஐக் கிய தேசிய முன்னணியின் பெரும்பான்மை பலத்துக்கு தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் பங்களிப்பு முக்கியமானதாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து, சம்மந்தன் தலைமை யிலான தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குக் கிடையாது என ஐக்கிய மக்கள் சுதந் திர முன்னணியைச் சேர்ந்தோரால் முன்வைக்கப்படும் பிரதானமான வாத மாக அமைந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷவும் சந்தித்து கலந்துரையாடி யுள்ளதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களுடன் ஜனா திபதி மைத்திரிபால சிறிசேனா சந்திப்பு நடாத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது.