Breaking News

த.தே.கூட்டமைப்பு மீது குற்றச்சாட்டு - சுரேஸ் பிரேமசந்திரன்.!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை எந்தவொரு முன் நிபந்தனைகளும் இன்றி மீண்டும் பிரதமராக்க தமிழ் தேசியக் கூட்டமை ப்பு முயற்சித்து வருவதாக கூட்டமைப்பிலிருந்து விலகி சுயாதீனமாக செயற் பட்டுவரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி குற்றம் சுமத்தியுள்ளாா்.

தமழ் தேசியக் கூட்டமைப்பின் தலை வர்கள் என கூறிக்கொள்ளும் ஒரு சிலரின் எதேட்சகரமான செயற்பாடு களினால் தமிழ் மக்கள் மாத்திர மன்றி, தமிழ் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏமாற்றப்பட்டுள்ளதாக ஈ.பி.ஆர்.எல். எவ். இன் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் குற்றம் சுமத்தியுள் ளாா்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிர தமராக நியமிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு நேற்று முன்தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்திருந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத் திட்டு அனுப்பிவைத்திருந்த கடிதம் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின் றனர்.

 இந்நிலையில் அரசியலமைப்பை மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட செயற்பாட்டிற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதற்காக நாடாளு மன்ற உறுப்பினர்களின் சத்தியக்கடதாசியை பெற்றுக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இதனை ஒரு கட்சிக்கு சார்பாக பயன்படுத்தியுள்ள தாக கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ள ஈ.பீ.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் குற்றம் சாட்டியிருக்கின்றார்.

இவ்வாறான சூழலில் முன் நிபந்தனை இன்றி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆத ரவு வழங்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒரு வரலாற்று தவறினை இழைத்துள்ளதாகவும் சுரேஷ் பிறேமச்சந்திரன் சாடியுள்ளார்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளான அரசியல் கைதி களின் விடுதலை, காணி விடுவிப்பு உள்ளிட்ட சிக்கல்கள் தீர்க்கப்படாது உள்ள சூழலில் இரா. சம்பந்தனும் சுமந்திரனும் ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சி பீடம் ஏற்றுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளதாக சுரேஸ் பிரேமசந்திரன் குற்றம் சுமத்தினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆரம்பம் முதல் இதுவரை ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்கும் முயற்சியிலேயே ஈடுபட் டுள்ளதாகவும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்.