Breaking News

சேனா படைப்புழுவை ஒழிக்க சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம்.!

நாடு முழுவதும் பயிர்செய்கைகளை தாக்க ஆரம்பித்துள்ள சேனா படைப் புழு வினை ஒழிப்பதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பினை நாடவுள்ளதாக விவசாய அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

சேனா படைப்புழுவை ஒழிப்பது தொடர்பில் நேற்யை தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நடை பெற்ற கலந்துரையாடலின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளாா்.

சேனா படைப்புழுவின் மாதிரியை அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி யுள்ளதாக தெரிவித்த விவசாய அமைச்சு, நாட்டில் சோளம் பயிர்செய்கையை தாக்கியுள்ள இப் படைப் புழுவா னது சுமார் 100 வகையான பயிர் செய்கைகளையும் தாக்கலாமெனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.