Breaking News

கொச்சிக்கடையில் மீட்கப்பட்ட குண்டு வெடிக்க வைக்கப்பட்டது (காணொளி)

கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் உள்ள
அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் வானொன்றில், காணப்பட்ட பொதியொன்றினை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

அந்த பொதியினை சோதனையிட்டபோது அதிலிருந்து குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதையடுத்து படையினர் அந்த குண்டை எதுவித சேதமுமின்றி பாதுகாப்பாக வெடிக்கச் செய்துள்ளனர்.

நேற்றிலிருந்து இந்த வாகனம் அப்பகுதியிலேயே நின்றுள்ளதாகவும் தாக்குதலாளிகள் இந்த வாகனத்தை பயன்படுத்தியிருக்கலாம் எனவும் தெரியவருகின்றது.


இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு எம்முடன் இணைந்திருங்கள்...