Breaking News

இந்தியப் பிரதமருடன் ஜனா­தி­பதி மைத்­திரி இன்று சந்­திப்பு.!

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான இலங்கை குழு­வி­னரை சந்­தித்துப் பேச­வுள்ளார்.

இன்று காலை 10.50 மணி­ய­ளவில் ஐத­ராபாத் இல்­லத்தில் இச் சந்­திப்பு நடை­பெ­ற­வுள்­ளது. இந்­தியப் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பார­திய ஜனதாக் கட்சி பெரும்வெற்­றி­யீட்­டி­யதை அடு த்து நரேந்­திர மோடி நேற்று இரண்­டா­வது தட­வை­யா­கவும் பிர­த­ம­ராக பத­வி­யேற்­றி­ருந்தார்.

பத­வி­யேற்பு நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பங்­கேற்­றி­ருந்தார். ஜனா­தி­ப­தி­யுடன் இலங்கைக் குழுவில் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் மற்றும் இலங்கைத் தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஆறு­முகன் தொண்­டமான், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்­டமான் ஆகி­யோரும் பங்­கேற்­றி­ருந்­தனர்.

நேற்று இரவு பிர­தமர் நரேந்­திர மோடி பத­வி­யேற்­றதை அடுத்து ராஷ்­ர­பதி பவனில் நிகழ்வில் பங்­கேற்ற வெளிநாட்டு தலை­வர்­க­ளுக்கு விருந்­து­ப­சாரம் அளிக்­கப்­பட்­டது. பிர­தமர் நரேந்­திர மோடியின் ஏற்­பாட்டில் நடை­பெற்ற இந்த நிகழ்வில் இந்­தியத் தலை­வர்கள் பலரும் கலந்­து­கொண்­டனர்.

இத­னை­ய­டுத்தே இன்று காலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான இலங்கைத் தூதுக் குழுவை இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி சந்­தித்துப் பேச­வுள்ளார். இச் சந்­திப்பின் போது இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உற­வு­களை கட்­டி­யெ­ழுப்­ப­வது தொடர்­பிலும் எதிர்­காலத் திட்­டங்கள் குறித்தும் விரி­வாக ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.

இதே­வேளை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான இலங் கைக் குழுவினர் இன்று பிற்பகல் புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத் துக்கு விஜயமாகவுள்ளனா்.