Breaking News

ஜனா­தி­ப­தியின் அழைப்பை நிரா­க­ரித்த தெரி­வுக்­குழு

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நடை­பெற்ற தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தும் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவில் அங்கம் வகிக்கும் உறுப்­பி­னர்­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பேச்­சு­வார்த்­தைக்கு அழைத்­த­போ­திலும் ஜனா­தி­ப­தியின் கோரிக்­கை­யினை தெரி­வுக்­குழு உறுப்­பி­னர்கள் நிரா­க­ரித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

தெரி­வுக்­குழு உறுப்­பி­னர்­க­ளுடன் சந்­திப்­பினை மேற்­கொள்­வ­தற்கு ஜனா­தி­பதி விருப்பம் தெரி­வித்­தி­ருந்தார். ஆனாலும் பாது­காப்பு அமைச்­ச­ரான ஜனா­தி­பதி தொடர்­பிலும் தெரி­வுக்­கு­ழுவில் தற்­போது ஆரா­யப்­ப­டு­வதால் அவரை சந்­தித்துப் பேசு­வதை தவிர்ப்­பது நல்­லது என்று தெரி­வுக்­குழு உறுப் ­பி­னர்கள் தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

நேற்­றைய தினம் தெரி­வுக்­குழு விசா­ரணை ஆராம்­ப­மா­வ­தற்கு முன்னர் ஜனா­தி­ப­தியின் இந்தக் கோரிக்கை குறித்து விரி­வாக ஆரா­யப்­பட்­ட­போ­திலும் ஜனா­தி­ப­தி­யுடன் சந்­திப்­பினை தவிர்ப்­பது நல்­லது என பல உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தமையினால் ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.