Breaking News

சர்வதேச தந்தையர் தின வாழ்த்துக்கள்....!

தன் வம்சத்தை நீடிக்கச் செய்யும் வாரிசுதனை அள்ளி அரவணைத்து, சீராட்டி பாராட்டி வளர்க்கும் ஒவ்வொரு தந்தையும் பிள்ளைகளின் முதல் நண் பனாகின்றார்.

தந்தையின் வாழ்க்கை அனுபவம் ஒவ்வொரு பிள்ளைகளும் படிக்க வேண்டிய புத்தகமாகும். இந்த உல கில் ஒவ்வொரு பிள்ளையினதும் மிகச்சிறந்த நண்பன் யாரென்றால் அது அந்த பிள்ளையின் தந்தை தான்…

இவ்வளவு ஏன்! எம் ஒவ்வொருவருக் கும் முதல் கதாநாயகனே எமது தந்தை தான்.. அப்பா …..என்ற சொல்லில் அத் தனை அர்த்தங்கள்! தன் பிள்ளையை கருவில் சுமப்பது தாயென்றால், தோள் மீது சுமப்பது தந்தை தான்!

எவ்வித இடையூறும் இன்றி தன் பிள்ளை வரள வேண்டும் என மார்போடு அணைத்து தாய் அரவணைக்கிறாள்… ஆனால், தன் பிள்ளை இந்த உல கத்தையே பார்க்க வேண்டும் என்ற அவாவில்.. தன் பிள்ளையை தோல் மீது சுமக்கிறார் தந்தை…

தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிறன்று தந்தையர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்பை கூட அதட்டலாக வெளிப்படுத்துவதான் தந்தையின் சிறப்பு. உலகளா விய ரீதியில் வெவ்வேறு தினங்களில் தந்தையர் தினம் கொண்டாடப்படு கின்றது.

இவ்வாறு தந்தையர் தினம் கொண்டாடப்படும் தினம் வித்தியாசப்பட்டாலும் தந்தையர் தினம் என்ற அந்த நாள்.. உணர்வுபூர்வமானதும் பெறுமதியானது மான நாளாகும்!

தான் அனுபவித்த எந்தவொரு இன்னலையும் தன் பிள்ளை படக்கூடா தென்ப தில் எப்போதும் விழிப்பாய் இருப்பவர் தான் தந்தை! இந்நாளில் எமது தந்தை யர் எமக்காக செய்த தியாகங்களையும் அனுபவித்த கஷ்டங்களையும் எண் ணிப்பார்க்க வேண்டிய கடப்பாடு எம் ஒவ்வொருவருக்கும் உண்டு!

ஒன்றின் பெறுமதியை அதனை இழந்த பின்னர் உணர்வதே மனித இயல்பு! எனவே, தந்தையின் பெறுமதியை அவரது வாழ்நாளில் உணர்ந்து ஒவ்வொரு பிள்ளையும் செயற்பட வேண்டும்.

இந்த நாளில் உலக வாழ் அனைத்து தந்தையருக்கும் இனிய தந்தையர் தின நல்வாழத்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகின்றோம் எமது இணையம் சார்பில்.