Breaking News

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழில் போராட்டம்.!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இல ங்கை தமிழரசு கட்சியின் 16 ஆவது தேசிய மாநாடு நடைபெற்று வந்த நிலையில் , மாநாட்டு மண்டபத் திற்கு முன்னால் குறித்த போராட்டம் நடை பெற்றுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளின் நிலைமை தொடர் பில் வெளிப்படுத்துமாறு கோரி கோசங்களை எழுப்பினார்கள்.

வெளியே மதிய வெயிலுக்குள் நின்று மக்கள் போராடிய போதிலும் மண்டபத் தினுள் மாநாடு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சிறிது நேரம் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.