Breaking News

குமார் சங்கக்காரவை வாக்குமூலம் மூலம் வழங்க அழைப்பு!

2011 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணியின் தலைவராக இருந்த குமார் சங்கக்காரவை வாக்குமூலம் வழங்குவதற்காக விளையாட்டு அமைச்சின் விளையாட்டு தவறுகள் தொடர்பான விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார்.  

2011 ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டித் தொடரின் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணம் செய்யப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் இவ்வாறு வாக்குமூலம் வழங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார். 

அதனடிப்படையில் நாளை காலை 9 மணிக்கு அவரை ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை இன்று காலை 10.15 மணியளவில் விளையாட்டு தவறுகள் தொடர்பான விசாரணை பிரிவில் ஆஜரான இலங்கை அணியில் முன்னாள் வீரர் உபுல் தரங்க சுமார் 2 1/2 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடைய ஏனைய செய்தி