Breaking News

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

நாட்டில் நேற்றைய தினம் 8 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

அவர்களில் லங்காபுரவில் கொவிட் 19 தொற்றுறுதியானருவடன் தொடர்பை பேணிய ஒருவர் அடங்குகின்றார்

அத்துடன் ஏனைய 7 பேரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பி தனிப்படுத்தப்பட்ட நிலையில் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 823 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 75 பேர் நேற்றைய தினம் குணமடைந்து வைத்தியாசலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 514 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் 298 நோயாளர்கள் நாட்டில் உள்ள பல வைத்தியாசலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.