Breaking News

டெல்லி அணி த்ரில் வெற்றி: வில்லன் டூ ஹீரோ க்ளைமேக்ஸ் - ஸ்டோனிஸ் கருத்து!

ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் டெல்லி அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. 

பஞ்சாப் அணி டாஸ் வென்று ஃபில்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய டெல்லி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது. அடுத்துக் களமிறங்கிய பஞ்சாப் அணியும் 8 விக்கெட் இழப்பிற்க்கு 157 ரன்கள் குவித்ததால் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவரில் களமிற்கிய பஞ்சாப் அணி முதல் பந்தில் இரண்டு ரன்களை எடுத்தது. அடுத்த பந்தில் ராகுல் அவுட் ஆனார். தொடர்ச்சியாக பூரனும் அவுட் ஆனதால், டெல்லி அணிக்கு 3 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

ரபாடா அபாரமாகப் பந்து வீசினார். எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு முகமது ஷமி பந்து வீசினார். முதல் பந்தில் ரன்கள் விட்டுக் கொடுக்கவில்லை. இரண்டாவது பந்தில் ஒரு ஒய்டு மற்றும் இரண்டு ரன்கள் கிடைத்ததால் டெல்லி அணி வெற்றிபெற்றது. 

முன்னதாக களமிறங்கிய டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து ரன்களை சேர்க்கத் தடுமாறியது. ஸ்ரேயஸ் ஐயர்(39), ரிஷப் பந்த்(31) ரன்கள் எடுத்தனர். 19 ஓவர்கள் முடிவில் 127ஆக இருந்த ஸ்கோர், ஸ்டோனிஸ் அபரமாக ஆடி 30 ரன்கள் சேர்த்ததால், ஸ்கோர் 157ஆக உயர்ந்தது. 

21 பந்துகளில் 53 ரன்களை ஸ்டோனிஸ் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. முகமது ஷமி 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்களை கைப்பற்றி 15 ரன்கள் விட்டுக் கொடுத்தார். 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பஞ்சாப் அணியில் மாயங்க் அகர்வால் மட்டுமே சிறப்பாக சோபித்து 89 ரன்கள் எடுத்தார். 

மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் போட்டி டிரா ஆனது குறிப்பிடத்தக்கது. ரபாடா, அஸ்வின், மார்கஸ் ஸ்டோனிஸ் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருது பெற்ற ஸ்டோனிஸ் பேசியபோது, ”அதிர்ஷ்டம் யார் பக்கம் செல்கிறதோ, அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகும். கிளைமேக்ஸில் வில்லன் டூ ஹீரோவாக மாறிவிட்டோம். இந்த போட்டியை என்னால் மறக்க முடியாது” எனத் தெரிவித்தார்.