Breaking News

பாடசாலை மாணவர்களுக்கான விசேட செய்தி! - கல்வி அமைச்சு

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான இரண்டாம் தவணைக்குரிய பாடசாலை விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி பாடசாலைகள் நிறைவடையவுள்ளதோடு மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நொவெம்பர் மாதம் 09 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.