Breaking News

பிக் பாஸ் வீட்டுக்கு போகும் சனம் ஷெட்டி: தர்ஷன், துரோகம் பற்றி பேசுவாரா?

பிக் பாஸ் 4 நிகழ்ச்சி துவங்க இன்னும் சில நாட்கள் தான் இருக்கிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் யார், யார் என்பதை தெரிந்து கொள்ள பார்வையாளர்கள் ஆவலாக இருக்கிறார்கள். மேலும் நிகழ்ச்சி துவங்கும் தேதியை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். 

பிக் பாஸ் 4 ப்ரொமோ வெளியான கையோடு சனம் ஷெட்டி போட்டியாளர்களில் ஒருவர் என்று கூறப்பட்டது. ஆனால் அவரோ நான் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லவில்லை என்றார். இந்நிலையில் சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டிற்கு செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சனம் ஷெட்டியை பிக் பாஸ் வீட்டிற்கு வரவேற்று பலரும் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தர்ஷனுடன் சேர்ந்து சனம் ஷெட்டியும் விண்ணப்பித்தார். ஆனால் சனம் ஷெட்டியை தேர்வு செய்யவில்லை. 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி முடிந்த கையோடு தர்ஷனுக்கும், சனம் ஷெட்டிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தார்கள். தனக்கும், தர்ஷனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திருமணத்தை நிறுத்திவிட்டார் என்று சனம் புகார் தெரிவித்தார். மேலும் நிச்சயதார்த்த புகைப்படங்களும் வெளியாகி வைராகின. 

இதை பார்த்த தர்ஷன் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது சனம் ஷெட்டி தன் முன்னாள் காதலருடன் சேர்ந்து விடிய, விடிய பார்ட்டி செய்ததாக கூறினார். தர்ஷன், சனம் ஷெட்டி இடையே மோதல் ஏற்பட்டதால் தான் அவரை இந்த சீசனில் தேர்வு செய்துள்ளார்கள் என்கிறார்கள் பிக் பாஸ் பார்வையாளர்கள். 

பிக் பாஸ் வீட்டில் வைத்து சனம் நிச்சயம் தர்ஷன் விஷயத்தை பேசுவார், அவர் தனக்கு துரோகம் செய்ததை கூறி கண்ணீர் விடுவார், பெண்ணியம் பற்றி பேசுவார். இதை வைத்து டி.ஆர்.பி.யை ஏற்றலாம் என்று திட்டம் போட்டுத் தான் பிக் பாஸ் செயல்படுகிறார். பிக் பாஸ் லேசுபட்டவர் இல்லை, குசும்பன் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள். 

ரியோ ராஜ், அனு மோகன், ஜித்தன் ரமேஷ், ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், கேப்ரியலா சார்ல்டன் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு செல்வது உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.