Breaking News

வீதி ஒழுங்கு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட புதிய தீர்மானம்!

கடந்த சில நாட்களாக அமுல்படுத்தப்பட்டு வரும் புதிய வீதி ஒழுங்கு தொடர்பில் மொறட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் காவற்துறையினர் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து வீதி ஒழுங்கு விதிகளை அமுல்படுத்தும் போது உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மேலதிக இடம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த தீர்மானத்திற்கு பிரதி காவற்துறை மா அதிபர் மற்றும் போக்குவரத்து திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.