Breaking News

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக தொடர்ந்து நீடிக்கும் எண்ணம் இல்லை! - சுமந்திரன் (காணொளி)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக தொடர்ந்து நீடிக்கும் எண்ணம் தமக்கில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது.

இதனையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை டெலோ மற்றம் புளோட் ஆகிய கட்சிகள் கோரியிருந்தன.

இந்தநிலையில் எமது வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், தமக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக வருவதற்காக சிந்தனையும் இல்லை என குறிப்பிட்டார்.

விழுதுகள் நிகழ்ச்சியின் முழமையான காணொளி இதோ...