Breaking News

பாடகர் எஸ்.பி.பி. உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம் - மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என அவர் சிகிச்சை பெறும் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 



அதிகபட்ச உயிர்காக்கும் மருத்துவ கருவிகளின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டாலும் அவர் மிக மிக கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவர்கள் பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையை மிகவும் கவனத்துடன் கண்காணிப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.