Breaking News

பல்கலைகழக மாணவர்களை அதிகரிக்க தீர்மானம்!

இந்நாட்டின் பிரதான பொறியியல் பீடங்கள் 6 இற்காக 405 மாணவர்களை அதிகரிக்க கல்வி அமைச்சின் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். 

உயர்கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். 

இலங்கையில் தற்போதுள்ள பிரதான பொறியியல் பீடங்களுடன் கூடிய பல்கலைகழகங்களான பேராதெனிய, ஜயவர்தனபுர, யாழ்ப்பாணம், ருகுணு, மொரட்டுவ மற்றும் தென் கிழக்கு பல்கலைகழகங்களுக்கு குறித்த 405 மாணவர்களை உள்ளடக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.