Breaking News

கொரோனா தொற்றுக்கு மேலும் 4 பேர் பலி - (27 வயது பெண் உட்பட)


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார ​சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். 

கொழும்பு 10 ஐச் சேர்ந்த 70 வயது ஆண்,  கொழும்பு 15 ஐச் சேர்ந்த 27 வயது பெண்,  களுத்துறையைச் சேர்ந்த 59 வயது பெண், களுத்துறையைச் சேர்ந்த 86 வயது ஆண் ஆகியயோர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக உயர்வடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.