Breaking News

நாளை மாவீரர் தினம் – இன்று மாங்குளத்தில் வெடிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கற்குவாரி பகுதியில் தனியார் ஒருவருடைய காணியில் குண்டு ஒன்று சற்று முன்னர் வெடித்துள்ளது. 

தனியார் ஒருவருடைய காணியில் குறித்த குண்டு எவ்வாறு வெடித்தது என்பது தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் மற்றும் இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இருப்பினும் குறித்த குண்டு வெடிப்பு சம்பவத்தினால் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகின்றது. மாவீரர் தினம் நாளை அனுஸ்டிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், முல்லைத்தீவு மாங்குளம் கற்குவாரி பகுதியில் இன்று நண்பகலில் இந்த வெடிகுண்டு வெடித்துள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் நீதவான் நீதிமன்றங்களது நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஷ்டிக்க அந்தந்த நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.