Breaking News

நான் போட்டியாளரே இல்லை! என்னை விட்டு விடுங்கள் என கோவத்துடன் கூறி வெளியேறிய அனிதா!

பிக் பாஸ் வீட்டில் சென்ற வாரம் லக்ஜுரி பட்ஜெட் டாஸ்க்காக கால் சென்டர் டாஸ்க் விறுவிறுப்பாகவும், பல விவாதங்களுடனும் நடைபெற்று முடிந்தது. அதில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தங்களின் மனதில் உள்ள ஆதங்கங்களை டாஸ்க்கின் மூலமாக நன்றாகவே வெளிப்படுத்தியிருந்தனர். 

அதை பார்த்து “சபாஷ் சரியான போட்டி” என பிக் பாஸ் வேடிக்கை பார்த்தும், நான் மனதில் நினைத்ததை அப்படியே கேட்டுட்டியே என ரசிகர்கள் பேசியும் வரும் அளவுக்கு கால் சென்டர் டாஸ்க் வெறித்தனமாக இருந்தது என்றே கூறலாம்.  

இந்நிலையில் கால் சென்டர் டாஸ்க்கில் சிறப்பாக பெஃர்பார்ம் செய்தவர்களின் அடிப்படையில் 1 லிருந்து 13 வரை வரிசைப்படுத்த வேண்டும் என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டும் அதற்காக போட்டியாளர்கள் அனைவரும் விவாதம் செய்வது போலவும் முதல் ப்ரொமோவில் காட்சிகள் வெளியானது.  

அதே போல் இன்றைய 2 வது ப்ரொமோவில் வரிசைப்படுத்தும் டாஸ்க்கில் முதல் இடத்திற்கு அர்ச்சனா, ஆரி, சனம் என மூவரும் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். இறுதியில் சனம் முதல் இடத்திலும், அனிதா 2 வது இடத்திலும் நின்று கொண்டும் அதை ஏற்க முடியாது என பாலாஜியுடன் மற்ற போட்டியாளர்களும் விவாதம் செய்தனர். அதை பார்த்த ரசிகர்களுக்கு இது வீடா? சந்தை கடையா? என கமெண்ட் அடித்தனர்.  

அதைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததிலிருந்தே சின்ன விசயங்களுக்கெல்லாம் டென்சன் ஆகி தனியாக அமர்ந்து பிரச்சினையை பெரிதாக்கி கொண்டிருந்து அனிதா எலிமினேஷன் டாப்பிள் கார்டை வென்றதிலிருந்தே சனமுடன் சேர்ந்து கொண்டு சற்று சாமர்த்தியமாக விளையடுவது போல் கடந்த வாரங்களில் விளையாடிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த வரிசைப்படுத்தும் டாஸ்க்கில் அனிதா 2 வது இடத்தில் நிற்பதை மற்ற போட்டியாளர்கள் ஏற்றுக்கொள்ளாமல் கேபி மற்றும் ரமேஷ் அனிதாவிற்கு 2 வது இடம் சரியல்ல என்ற கருத்துக்களை கூறியதைக் கேட்டு டென்ஷன் ஆன அனிதா டாஸ்க்கில் இருந்து வெளியேறி எனக்கு எந்த இடமும் வேண்டாம் என கூறி வழக்கம் போல் தனியாக அமர்ந்து கொண்டார்.