Breaking News

பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி – ஜனாதிபதி பணிப்புரை!

 


இலங்கையில் 15 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குமாறு சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.


இந் நடவடிக்கையின் போது ஏனைய தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.