Breaking News

யாழ்.சிறைச்சாலையில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

 


யாழ்ப்பாணம்  சிறைச்சாலையில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 16ம் திகதி சிறைச்சாலையிலுள்ள 39 போிடம் பெறப்பட்ட பீ.சி.ஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம்  (ஞாயிற்றுக்கிழமை) பரிசோதிக்கப்பட்ட  வேளையில் 34 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் 22 வயதான இளம் பெண்ணும் அடங்கியிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.