Breaking News

முல்லைத்தீவு கடற்பரப்பில்பிலும் பெறுமதிமிக்க வலைகள் அழிக்கப்பட்டுள்ளது!

 


இந்தியாவிலிருந்து வருகை தரும் மீன்பிடி டோலர் படகுகள் உள்ளுர் மீனவர்களின் வலைகளை சேதப்படுத்திய சம்பவங்கள் பதிவாகி வருவதாக முல்லைத்தீவு  மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


தமது பெறுமதிமிக்க வலைகளை இந்திய இழுவைப் படகுகள் அழித்து துண்டாடி வருவதாகவும் இந்த மீனவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.


இந்த காலங்களில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் இது தொடர்பாக முறையிட்டும் இதுவரையில் பலன் கிடைக்கவில்லை என மீனவர்கள் அதிர்ப்தி வெளியிடுகின்றனர்.


தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றால் தாமே நேரடியாக கடலுக்குச் சென்று அவர்களை கட்டுப்படுத்த வேண்டி நேரிடும் என இவர்கள் தெரிவிக்கின்றனர்.


இவர்களுடைய பெறுமதியான பல வலைகள் அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு இருந்ததையும் இந்த மீனவர்கள் ஊடகவியலாளர்களுக்கு காண்பித்தனர்