Breaking News

கொரோனா மரண எண்ணிக்கையில் அதிகரிப்பு!



இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த விடயத்தினை உறுதி செய்துள்ளார்.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,725 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட 07 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 11 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

30 – 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 05 ஆண்களும் 02 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்மோரில் 07 ஆண்களும் 05 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.