Breaking News

நாட்டின் சில பிரதேசங்களில் பி.ப 1.00 மணிக்கு பின்னர் மழை!



வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்...

அனுராதபுரம் - சிறிதளவில் மழை பெய்யும்

மட்டக்களப்பு - சிறிதளவில் மழை பெய்யும்

கொழும்பு - பிரதானமாக சீரான வானிலை

காலி - பிரதானமாக சீரான வானிலை

யாழ்ப்பாணம் - மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

கண்டி - பிரதானமாக சீரான வானிலை

நுவரெலியா - பிரதானமாக சீரான வானிலை

இரத்தினபுரி - பிரதானமாக சீரான வானிலை

திருகோணமலை - மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

மன்னார் - சிறிதளவில் மழை பெய்யும்