Breaking News

ஆயிரத்தை தாண்டிய இன்றைய கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!

 


நாட்டில் மேலும் 1,281 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 640,548 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் மேலும் 31 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 16,086 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 607,583 ஆக அதிகரித்துள்ளது.