மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படமாட்டாது – மின்சக்தி அமைச்சர்
நுரைச்சோலை அனல்மின் நிலையம் புனரமைக்கப்படும் வரை தனியார் ஆலைகளில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இதன் காரணமாக நாளை முதல் மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிநுட்பக் கோளாறு காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் பழுதடைந்தடைந்துள்ளமையால், நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுலாகும் காலம் அதிகரிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.