Breaking News

இந்தியாவில் 41 ஆண்டுகளாக 5 காசுக்காக(சதம்) நடைபெற்றுவரும் வழக்கு


இந்த விநோத ம் இந்தியாவில்தான்!
தமிழ் திரைப்படம் ஒன்றில் வரும்

“5 காசு திருடினா தப்பா? 5 கோடி பேர் 5 காசு திருடினா தப்பா? 5 கோடி பேர் 5கோடி தடவை 5 காசு திருடினா தப்பா? என்ற வசனம் டெல்லி போக்கு வரத்து கழகத்தின் நடவடிக்கைக்கு சரியாக பொருந்தும்.

1973ம் ஆண்டு பெண் பயணி ஒருவருக்கு 15 காசு பயணச்சீட்டுக்குப் பதிலாக 10 காசு பயணச் சீட்டு கொடுத்ததால், அரசுக்கு 5 காசுகள் நஷ்டம் ஏற்படுத்தியதாக ஒரு கண்டக்டர்மீது டெல்லி போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்தது.

பல்வேறு கட்டணங்களை தாண்டி 41 ஆண்டுகளுக்குப் பிறகும் அது விடாப்பி டியாக நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. தவறு செய்பவர்களுக்கு இது பாடமாக இருக்க வேண்டும். கடமையில் இருந்து தவறியவர் களுக்கு சிறிதளவு கூட இரக்கம் காட்டக் கூடாது என்று தனது மனுவில் டெல்லி போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.

1973 -டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்தில் கண்டக்டராக பணி புரியும் ரன்வீர் சிங், பறக்கும் படை சோதனையில் சிக்கினார். அப்போது ஒரு பெண் பயணிக்கு 15 காசுகள் பயணச்சீட்டுக்கு பதிலாக 10 காசுகள் பயணச்சீட்டை அவர் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தனது தவறை ரன்வீர் சிங் ஒப்புக் கொண்டார். ஆனால், பறக்கும் படையினர் அதை ஏற்கவில்லை. போக்குவரத்து கழகத்துக்கும், அரசுக்கும் 5 காசுகள் நஷ்டம் எற்படுத்திய அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.

1976 – ரன்வீர் சிங்கால் 5 காசுகள் நஷ்டம் ஏற்பட்டது துறை ரீதியிலான விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே இது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டதால், அவரை பணி நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது.

1976 – போக்குவரத்துக் கழகத்தின் உத்தரவை எதிர்த்து தொழிலாளர் நீதிமன்றத்தில் ரன்வீர் வழக்கு தொடர்ந்தார். 1990 – ரன்வீருக்கு சாதகமாக நீதி மன்றம் தீர்ப்பு அளித்தது. உடனடியாக அவரை பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பணியில் இல்லாத காலத்துக்கும் சம்பளம் தரப்பட வேண்டும் என்று உத்தர விட்டது. 

1990 – இதை ஏற்காத போக்குவரத்துக் கழகம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ரன்வீருக்கு அளிக்கப்பட்ட தண்டனை, தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். கடமையில் இருந்து தவறியவர்களுக்கு சிறிதளவு கூட இரக்கம் காட்டக் கூடாது என்று தனது மனுவில் போக்குவரத்து கழகம் கூறியது.

2008 – உயர்நீதிமன்றமும் ரன் வீருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. 2008 – தனக்கு ஓய்வூதியம், ஓய்வூதியப் பலன்கள் அளிக்க வேண்டும் என்று ரன்வீர் சிங் கோரினார்.

2014 – ஓய்வூதியம் அளிக்க தயாராக இல்லாத போக்குவரத்துக் கழகம், தற்போது உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு வரும் ஆகஸ்ட் 12ம் தேதி விசாரணைக்கு வருகிறது. போக்குவர த்துக் கழகம் தொடர்ந்து 41 ஆண்டுகள் விடாப்பிடியாக வழக்கை நடத்தி வருகிறது. தற்போது 70 வயதாகும் ரன்வீர் சிங்கும் தொடர்ந்து போராடி வருகிறார்.

- சிவா