Breaking News

எந்த ஜென்மத்திலும் வைரமுத்துவுடன் சேர வாய்ப்பில்லை. இளையராஜா


28 வருடங்களுக்கு பிறகு இளையராஜாவும்,
வைரமுத்துவும் மீண்டும் இணையபோவதாக கோலிவுட்டில் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஆனால் இந்த தகவல் பொய்யானது என்று இளையராஜா மறுத்துள்ளனர்.

கடந்த 1986ஆம் ஆண்டு வெளிவந்த 'கடலோர கவிதைகள்' திரைப்படத்தில் இடம்பெற்ற "அடி ஆத்தாடி" என்ற பாடல்தான் இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய கடைசி பாடல். அதன்பின்னர் இருவரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கிவரும் இடம் பொருள் ஏவல் என்ற படத்தில் வைரமுத்து எழுதிய பாடல் ஒன்றை இளையராஜா பாடவிருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இதுகுறித்து இளையராஜா இன்று காலையில் நிருபர்களிடம் அளித்த விளக்கம் ஒன்றில், "சீனுராமசாமி யார் என்றே எனக்கு தெரியாது.

அவருடைய படத்தில் நான் வைரமுத்து எழுதிய பாடலை பாடவிருப்பதாக வந்த தகவல் முற்றிலும் பொய்யானது' என்று கூறினார். நானும் வைரமுத்தும் பிரிந்து 28 வருடங்கள் ஆகிவிட்டது. 28 ஜென்மங்கள் எடுத்தாலும் நாங்கள் மீண்டும் ஒன்றுசேர வாய்ப்பில்லை என்று கூறினார். 

தென்மேற்கு பருவக்காற்று என்ற தேசியவிருது பெற்ற திரைப்படத்தை இயக்கிய சீனுராமசாமியை யார் என்றே தெரியாது என இளையராஜா கூறியது கோலிவுட்டில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளது. அதே நேரத்தில் சீனுராமசாமிதான் இந்த வதந்தியை திட்டமிட்டு பரப்பியுள்ளதாகவும்,

அந்த ஆத்திரத்தில்தான் இளையராஜா அவ்வாறு கூறியதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. சீனுராமசாமி தற்போது விஜய் சேதுபதி, விஷால், நந்திதா, மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்து வரும் 'இடம் பொருள் ஏவல் என்ற படத்தை இயக்கிவருகிறார்.

இந்த படத்திற்கு இளையராஜாவின் மகன் யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.