Breaking News

மஹிந்தவை தோற்கடிக்க வேண்டும்- ரில்வின் சில்வா

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கட்டாயமாக தோற்கடிக்க வேண்டுமென ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகின்றார் என்பது விளையாட்டு காரியமல்ல. அவ்வாறு ஜனாதிபதியானால் முழு நாடுமே பாரதூரமான பாதக விளைவுகளை அனுபவிக்க நேரிடும்.சர்வாதிகார ஆட்சியை தோற்கடித்து, ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம் என்ற தொனிப்பொருளில் தேர்தல் பிரச்சாரம் செய்கின்றோம்.இந்த ஜனாதிபதி தேர்தல் சட்டவிரோதமானது, நீதியான முறையில் இந்த தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் எமக்கு தனிப்பட்ட ரீதியில் எவ்வித குரோதமும் கிடையாது. குடும்பத்தை பாதுகாத்துக் கொள்ளவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முயற்சிக்கின்றார்.தேசிய ஒற்றுமையை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது.கோடிக்கணக்கான பணம் செலவிடப்பட்டு தேர்தல் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.

குடும்ப ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதே இந்த பிரச்சாரத்தின் முயற்சியாகும்.நாட்டு மக்கள் இந்த முயற்சியை தோற்கடிக்க வேண்டுமென ரில்வின் சில்வா அண்மையில் மாத்தறை திக்வெல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.