Breaking News

நியுசிலாந்து 3 விக்கட்டுகளால் வெற்றி (2ம் இணைப்பு)

இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் நியுசிலாந்து அணி 3 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.


இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, 9 விக்கட்டுகளை இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதன் போது மஹேல ஜெயவர்தன 104 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.பதிலளித்து துடுப்பாடிய நியுசிலாந்து அணி, 43 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.குரேய் அன்டர்சன் 81 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

மஹெல அபாரம் - நியூஸிலாந்துக்கு இலக்கு 219

நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 219 என்ற வெற்றி இலக்கை இலங்கை நிர்ணயித்துள்ளது. 

அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை, முன்னதாக நியூஸிலாந்துடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது. 

முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நியூஸிலாந்து வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஆரம்பமானது. 

இதில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி அந்த அணி சார்பாக களமிறங்கிய மஹெல ஜெயவர்த்தன அபாரமாக ஆடி 104 ஓட்டங்களை விளாசினார். 

இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவருடைய 18வது சதமாகும். எனினும் இலங்கை அணி சார்பாக துடுப்பெடுத்தாடிய மற்றைய வீரர்கள் எவரும் அரைச்சதம் கூட கடக்காத நிலையில் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்த அந்த அணி 218 ஓட்டங்களைக் குவித்துள்ளது. இதன்படி 219 என்ற இலக்கு நியூஸிலாந்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.