மைத்திரியுடன் இணைந்து செயலாற்றத் தயார்-டக்ளஸ்
இலங்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மைத்திரி ஆட்சியுடன் இணைந்து செயலாற்றுவதற்கு நாம் தயார் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டி இன்றைய தினம் மைத்திரிபால சிறிசோன தனது பதவியை பொறுப்பேற்கவுள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் குறித்த அறிவிப்பினை விடுத்திருக்கின்றார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி நல்லாட்சியாக நடைபெறும் பட்சத்தில் அவர்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கு நாம் தயார்.நாம் இணக்க அரசியல் நிலைப்பாட்டினை தொடர்ந்தும் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றோம். இதனடிப்படையிலேயே முன்னைய ஆட்சியாளர்களுடனும் பேசி கொள்கை ரீதியான உடன் பாட்டுடன் நாம் செயற்பட்டோம்.
அந்தவகையில் புதிய ஆட்சியிலும் அவ்வாறான ஏது நிலைகள் உருவாகுமானால் அதனை பரிசீலிக்கவும் அவர்களுடன் இணைந்து செயலாற்றவும் நாம் தயார் நிலையில் இருக்கின்றோம் என அவர் கூறியுள்ளார்.







