சமாதானத்தின் ஊடாகவே நத்தாரை அர்த்தமுடையதாக மாற்ற முடியுமாம் - ரணில்!
சமாதானத்தின் குமாரர் என அழைக்கப்படும் இயேசுநாதரின் பிறப்பு நிகழ்ந்த நத்தார் தினத்தைக் கொண்டாடும் நாம் சமாதானத்தின் ஊடாகவே இந்த நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றியமைக்க முடியும். 
அனைவருக்கும் எழில் மிகு மற்றும் அர்த்தமான நத்தார் தினம் அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன் என்று  பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்து ள்ள நத்தார் தின வாழ்த்துச் செய்தி யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அந்த வாழ்த்துச் செய்தியில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  
சமாதா னம் மற்றும் அன்பின் சுப செய்தியுடன் தேவபுத்திரர் இயேசுநாதர் பிறந்தமையைக் கொண்டாடும் நத்தார் தினம் கிறிஸ்தவ மக்கள் வெகுவிமரிசையா கக் கொண்டாடும் ஓர் சமய வைபவமாகும்.
தற்போது  கிறிஸ்தவர்கள் மாத்திரமன்றி இன,மதபேதமின்றி பெரும்பாலானஉலகமக்கள் கொண்டாடும் கலாசாரநிகழ்வாகவும் மாறியுள்ளது.
ரோம வல்லரசின் சமூக,பொருளாதார முறைமையினுள் மக்கள் இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் இயேசுநாதர் மாட்டுத் தொட்டிலில், ஏழைப்பெற்றோருக்கு மகனாப் பிறக்கிறார். 
அவர் பௌதீக,மானசீக,ஆன்மீகவறுமையிலிருந்து,அடக்குமுறையிலிருந்துமீள்வதற்காக அன்பு, ஆதரவு, கருணை மிகுந்த சிறந்த சமூகமொன்றைஉருவாக்குவதற்காக தனது முழு வாழ்வையும்அர்ப்பணித்தார். 
இன, மதபேதங்களைத் தாண்டிய,சமாதானம், நல்லிணக்கம் மிகுந்த, நற்பண்புகள் நிறைந்தசிறந்த சூழலொன்றையும்சட்டம்,சமாதானம், நீதி என்பன ஆதி க்கம் செலுத்தும் சிறப்பானதோர் தேசத்தையுமே இன்று எமது சமூகமும் வேண்டி நிற்கிறது. 
நல்லமனிதன் தனதுஉள்ளத்தில் மறைத்து வைத்துள்ள நல்லஅம்சங்களை யும், கெட்டமனிதன் தனது உள்ளத்தில் மறைத்துவைத்துள்ள கெட்ட அம்சங்களை யும் வெளிப்படுத்துவதாக புனித பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
நல்லஅம்சங்களினால் நமது உள்ளங்களை நிரப்பி,சிறந்த மனிதர்களாக சமூகத்தை வளப்படுத்துவதனையே நாம் அனைவரும் நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
சமாதானத்தின் குமாரர் என அழைக்கப்படும் இயேசு நாதரின் பிற ப்பு நிகழ்ந்த நத்தார் தினத்தைக் கொண்டாடும் நாம் சமாதானத்தின் ஊடாகவே இந்த நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றியமைக்க முடியும். 
உங்கள் அனைவருக்கும் எழில்மிகுமற்றும் அர்த்தம் பொருந்தியநத்தார் தின மாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன். என்றார். 








