Breaking News

அபிவிருத்திகளை ஆராய ரணில் தலைமையில் புதிய குழு

மகிந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய குழு  ஒன்று நியமனமிக்கப்பட்டுள்ளது.   


அதற்கமைய துறைமுக,  நகர அபிவிருத்தித்திட்டம் , வடக்கு அதிவேகப்பாதை போன்றன பொது வசதிகள் திட்டங்கள் தொடர்பாக இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக இவை நடைமுறைப்படுத்தப்படுகின்றவா? என்பது குறித்து ஆராய்வதற்காகவே இந்த குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.   

இந்தக் குழு பிரதமர் ரணில் விக்கிமசிங்கவை தலைவராக கொண்டு இயங்கும் என்றும் அவருடன் எரிசக்தி மின் சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன,வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர,துறைமுக, கடற்றொழில் மற்றும் விமான சேசைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க  ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.