Breaking News

அரசியல்வாதிகளின் மனைவி, பிள்ளைகளும் கவனமாக இருக்க வேண்டும்!

அரசியல்வாதிகள் மாத்திரமல்ல அவர்களின் மனைவி மற்றும் பிள்ளைகளும் இந்த அரசாங்கத்திடம் கவனமாக இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி ஷசி வீரவங்சவின் உடல் நலன் குறித்து விசாரிப்பதற்காக நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு, மஹிந்த ராஜபக்ஷ சென்றிருந்தார். 

இதன்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

தொடர்ந்தும் கைது செய்யப்படும் நடவடிக்கைகள் இடம்பெறும் என இதன்போது சுட்டிக்காட்டிய அவர், இந்த பழிவாங்கும் அரசியல் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் பழி வாங்கும் அரசியல் மிகவும் தவறானது எனவும் தான் அப்படி எவரையும் பழிவாங்கவில்லை எனவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.