Breaking News

13 இற்கு அப்பால் செல்ல வேண்டும் இந்தியப் பிரதமர் மோடி வலியுறுத்தல்!


அர­சி­ய­ல­மைப்பின் 13ஆவது திருத்தச் சட்­டத்தின் விரை­வான முழு­மை­யான அமு­லாக்­கமும் அதற்கு அப்பால் செல்லும் செயற்­பாடும் தீர்வுக்கு சிறந்த பங்­க­ளிப்பை வழங்கும் என்று இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்தார்.

மேலும் இலங்­கையின் தமிழ் மக்கள் உள்­ளிட்ட அனைத்து சமூ­கங்­க­ளி­னதும் அபி­லா­ஷை­களைப் பூர்த்தி செய்­யக்­கூ­டிய வகையில் ஐக்­கிய இலங்­கைக்குள் சமத்­துவம், நியாயம், கௌரவம் மற்றும் சமா­தா­னத்­துடன் வாழ் வ­தற்கு இலங்கை அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளு­டனும் நாம் இருப்போம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இலங்­கையின் சிறப்­பான எதிர்­கா­லத்தை மேற்­கொள்­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால எடுக்கும் அனைத்து முயற்­சி­க­ளுக்கும் நாங்கள் உதவி செய்வோம். இலங்­கையின் சமா­தா­னத்­திற்கும் நல்­லி­ணக்­கத்­திற்குமான புதிய பய­ணத்­திற்கு இந்­தியா தனது உத­வியை வழங்கும் என் றும் அவர் குறிப்­பிட்டார்.

இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்­டுள்ள இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி நேற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் நடத்­திய இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தை­களின் பின்னர் உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்

இந்த அழ­கான நாட்­டுக்கு வருகை தர கிடைத்­த­தை­யிட்டு மகிழ்ச்சி அடை­கின்றேன். உங்­க­ளு­டைய சிறப்­பான வர­வேற்பு மற்றும் நட்­பினால் நான் மகிழ்ச்சி அடை­கின்றேன். 1987 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் இந்­தியப் பிர­தமர் ஒருவர் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்­வ­தா­னது மிகவும் முக்­கி­யத்­து­வ­மா­ன­தாகும்.

மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன்

கடந்த மாதம் இலங்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதி என்ற ரீதியில் முத­லா­வது விஜ­ய­மாக இந்­தி­யா­விற்கு வருகை தந்­தி­ருந்தார். அந்த வகையில் மிக­வி­ரைவில் இலங்கை வரக்­கி­டைத்­த­மைக்கு நான் மிகவும் மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன். இது அயல்­நாட்­ட­வர்கள் எவ்­வாறு செயற்­ப­ட­வேண்­டு­மென்­ப­தற்கு உதா­ர­ண­மாகும்.

அடிக்­கடி விஜ­யங்கள்

நாம் வழ­மை­யாக சந்­தித்­துக்­கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இது எம் ஒவ்­வொ­ரு­வ­ரையும் நாம் புரிந்து கொள்­வ­தற்கு சிறப்­பாக உதவும், பஸ்­பர விவ­கா­ரங்­க­ளுக்கு தீர்வு காணவும், நட்பை மேலும் முன்­கொண்டு செல்­லவும் இது உதவும். இத­னைத்தான் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­ட­னான சந்­திப்பின் மூலம் உணர்ந்தேன். எமது இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான உறவில் பொரு­ளா­தார தொடர்பு என்­பது மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாகும்.

தடை­களை குறைக்கும்

எமக்­கி­டையில் ஏற்­பட்­டுள்ள முன்­னேற்­ற­மா­னது எமது அர்ப்­ப­ணிப்பு, பல­மான பொரு­ளா­தார கூட்­டு­றவு என்­ப­வற்றை பிர­தி­ப­லிக்­கின்­றது. கடந்த 10 வரு­டங்­களில் எமது இரண்டு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான வர்த்­தகம் வெகு­வாக உயர்ந்­துள்­ளது. இந்­தி­யா­வு­ட­னான உறவு தொடர்பில் உங்­க­ளு­டைய கரி­ச­னையை நான் அறிந்­தி­ருக்­கின்றேன். இதனை நாம் ஆரா­ய­வேண்டும். சுங்க அதி­கா­ரி­க­ளுக்­கி­டை­யி­லான ஒத்­து­ழைப்பு குறித்து இன்று நாம் செய்த ஒப்­பந்தம் ஒரு முற்­போக்­கான விட­ய­மாகும். இது தடை­களை குறைப்­ப­தாக அமையும்.

சந்­தர்ப்­பங்­களை பார்க்­கின்றோம்

நாம் வெறு­மனே பிரச்­சி­னை­களை ஆராய்­வதை மட்டும் முன்­னெ­டுக்­காமல் புதிய சந்­தர்ப்­பங்கள் குறித்தும் நாங்கள் அவ­தா­னிக்­கின்றோம். இலங்கை இந்­திய எண்ணெய் நிறு­வ­னமும் இலங்கை பெற்­றோ­லி­யக்­கூட்­டுத்­தா­ப­னமும் சீனன்­கு­டாவில் உயர் தாங்கி ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்கு இனங்­கி­யுள்­ளன. பரஸ்­பரம் உடன்­பா­டுகள் எட்­டப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் மாதி­ரி­களை ஆராய்­வ­தற்கு ஒன்­றி­ணைந்த செய­ல­னி­யொன்று உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது.

திரு­கோ­ண­ம­லையை பிராந்­திய கேந்­தி­ர­மாக மாற்ற உத­வுவோம்

திரு­கோ­ண­ம­லையை இந்தப் பிராந்­தி­யத்தில் பெற்­றோ­லிய வளக்­கேந்­திர நிலை­ய­மாக உரு­வாக்­கு­வ­தற்கு இந்­தியா உதவ தயா­ரக இருக்­கின்­றது. மேலும் சாம்பூர் அனல் மின் நிலையத் திட்­டத்தை ஆரம்­பிப்­ப­தற்­கான கள­நி­லை­களை ஆராய்­வ­தற்கும் நாம் எதிர்­பார்க்­கின்றோம். இது இலங்­கையின் மின்­சாரத் தேவையை பூர்த்தி செய்­வ­தாக இருக்கும்.

செய­லணி

கடல்சார் பொரு­ளா­தாரம் இலங்­கைக்கும் இந்­தி­யா­விற்கும் மிகவும் முக்­கியம் வாய்ந்­தது. இது இரண்டு நாடு­களும் முன்­னு­ரிமை அளிக்­கப்­ப­ட­வேண்­டிய விட­ய­மாகும். கடல் பொரு­ளா­தாரம் தொடர்பில் ஆராய்­வ­தற்கு ஒன்­றி­ணைந்த செய­ல­ணியை நிய­மிப்­ப­தற்கு நாம் எடுத்த முடிவு மிகவும் முக்­கி­ய­மா­னது.

318 மில்­லியன் டொலர் உதவி

இளைஞர் விவ­கா­ரங்கள் தொடர்­பிலும் நாம் இரண்டு நாடு­க­ளுக்­கி­டையில் உடன்­பா­டு­களை செய்­து­கொண்­டுள்ளோம். இலங்­கையில் அபி­வி­ருத்தி பங்­க­ளா­ராக இருப்­பதில் இந்­தியா சிறப்புப் பெறு­கி­றது. இலங்­கையின் ரயில் பாதை­களை தர­மு­யர்த்­து­வ­தற்கு 318 மில்­லியன் அமெ­ரிக்க டெலர் கடன் உத­வியை வழங்­கு­வ­தற்கு இந்­தியா தீர்­மா­னித்­துள்­ளது. மேலும் மாத்­தறை பல்­க­லைக்­க­ழ­கத்தின் ரவிந்­தி­ரநாத் தாகூர் கேட்போர் கூடம் ஒன்றை அமைப்­ப­தற்கும் நாம் உதவி வழங்­க­வுள்ளோம்.

வடக்கு விஜயம்

நாளை (இன்று) இந்­திய வீட்டுத் திட்­டத்தை பார்­வை­யி­டு­வ­தற்கு செல்­ல­வுள்ளேன். இந்­திய வீட்­டுத்­திட்­டத்தில் 27 ஆயிரம் வீடுகள் செய்து முடிக்­கப்­பட்­டுள்­ளன. இலங்­கையின் ரூபாவை நிலை­யாக பேணு­வ­தற்கு இலங்கை மத்­திய வங்­கியும் இந்­திய ரிசவ் வங்­கியும் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு முன்­வந்­துள்­ளன.

மீனவர் விவ­காரம்

நாங்கள் மீனவர் விவ­காரம் குறித்தும் பேச்­சு­வார்த்தை நடத்­தினோம். இந்த குழப்­ப­க­ர­மான விவ­காரம் வாழ்­வா­தாரம் மற்றும் மனி­தா­பி­மானம் என்­ப­வற்றை உள்­ள­டக்­கி­யது. இதை இந்­தக்­கோ­ணத்தின் அடிப்­ப­டை­யி­லேயே நாம் கையா­ள­வேண்டும். ஆனால் இதற்கு ஒரு நீண்­ட­கால தீர்­வையும் தேட வேண்­டிய தேவையும் எமக்கு இருக்­கி­றது. எனவே இலங்கை, மற்றும் இந்­திய நாடு­களின் மீனவ சங்கப் பிர­தி­நி­திகள் சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்தி ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய இனக்­கப்­பாட்­டிற்கு வரு­வதே சிறந்­தது. அந்த முடிவை இரண்டு அர­சாங்­கங்­களும் ஏற்றுக்கொள்ளும்.

உதவுவோம்

மேலும் இலங்கையின் சிறப்பான எதிர்காலத்தை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் நாங்கள் உதவி செய்வோம். இலங்கையின் சமாதானத்திற்கான நல்லிணக்கணக்கத்திற்கான முன்னேற்றத்திற்கான புதிய பயணத்திற்கு இந்தியா தனது உதவியை வழங்கும்.

நல்லெண்ணம்

மேலும் இந்தப் பிராந்தியத்தின் சமாதானம், சிறந்த எதிர்காலம், கடல்சார் செயற்பாடுகளிலும், நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். எமது இன்றைய சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இந்த சந்திப்பு எமக்கு சிறந்த நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் எதிர்கால உறவு விடயத்தில் வழங்கியுள்ளது.

-ரொபட் அன்டனி