Breaking News

பாடலாசிரியர் தாமரையின் கணவர் பொலிஸில் வழக்கு!

வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால் போன்ற பல படங்களில் வெற்றி பாடல்களை கொடுத்தவர் தாமரை. இவர் தன் கணவர் தியாகு தன்னுடன் வாழ வேண்டும் என்று தர்ணா போராட்டம் செய்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது, அதனால் தான் தாமரையுடம் வாழ மறுக்கிறார் என பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியது.

இது குறித்து தியாகு, இந்த மாதிரி அவதூறு செய்திகள் பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்