Breaking News

யாழ்.பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் மாணவர்களினால் “விசைச் சிறகுகள்” சஞ்சிகை வெளியிடப்பட்டது


யாழ்.பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் அலகின் நான்காம் வருட மாணவர்களினால் ”விசைச் சிறகுகள்” என்னும் சஞ்சிகை இன்று வெளியிடப்பட்டது.


இன்று பிற்பகல் 3 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இன் நிகழ்வு ஆரம்பமாகியது.  பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலைப்பீடாதிபதி வி.பி.சிவநாதன் அவர்களும் அறிமுகவுரையினை சட்டத்துறை விரிவுரையாளர் திருமதி ம.கோசலையும், நூல் மதிப்புரையினை கலாநிதி.கந்தையா ,சிறீகணேசனும் நிகழ்த்தினர்.