Breaking News

தமி­ழ­னுக்கு தமி­ழீழம் என்ற ஒரு நாடு உருவாகட்டும் - சத்யராஜ்

இழந்­த­ நாட்டை மீட்­டெ­டுக்க வேண்டும் என்­பதே எமது ஒரே குறிக்கோள். எட்டு இலட்சம் சனத்­தொகை கொண்ட மக்­க­ளுக்கு கொசோவோ என்ற நாடு உரு­வா­கி­யது போல 10 கோடி தமி­ழ­னுக்கு தமி­ழீழம் என்ற ஒரு நாடு உரு­வா­கட்டும் என்று நடிகர் சத்­யராஜ் தெரி­வித்­துள்ளார். 

இயக்­குநர் கௌத­மனின் இயக்­கத்தில் இலங்­கையில் நடந்த இன அழிப்பு மற்றும் 2009 இன் பின்னர் இர­க­சி­ய­மாக தொட­ரப்­படும் கட்­ட­மைக்­கப்­பட்ட இன அழிப்பை சர்­வ­தேச சமூ­கத்தின் பார்­வைக்கு கொண்டு செல்லும் வகையில் உரு­வான பேர்சுட் ஒப் ஜஸ்டிஸ் (''Pursuit of Justice) என்ற ஆவ­ணப்­படம் சென்னை வட­ப­ழ­னியில் உள்ள ஏ.வி.எம் அரங்கில் திரையி­டப்­பட்­டது. 

இந்­நி­கழ்வில், கலந்துகொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.அவர் தொடர்ந்து அங்கு உரை­யாற்­று­கையில்,சரி­யான நேரத்தில் இந்த ஆவ­ணப்­படம் வெளியே கொண்டு வரப்­பட்­டுள்­ளது. தமி­ழர்­க­ளுக்­கு எதிரான கொடு­மைகள் இவ்­வ­ளவு நடந்த பின்பும் ஒரே நாடு என்று சொல்­வதில் எவ்­வித அர்த்­தமும் இல்லை. எங்­களைப் பொறுத்­த­வ­ரைக்கும் இழந்த நாட்டை மீட்­டெ­டுக்­கிறோம்.