எட்டு முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படவுள்ளனர்! அரசு அதிரடி நடவடிக்கை
எதிர்வரும் இரண்டு வாரங்களில் எட்டு முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யடவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை திணைக்களத்தின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. கடந்த அரசாங்கத்தில் கீழ் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பான 56 முறைபாடுகள் பதிவாகி இருந்தன.
அவற்றில் 26 முறைபாடுகள் குறித்த விசாரணைகள் முற்றாக நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், குறித்த எட்டு அமைச்சர்களை நீதிமன்றத்தின் ஊடாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.