Breaking News

வலி.வடக்கில் நடந்த கொடுமை! ஒரு அடி நிலத்தை கையளித்த இராணுவம்

வலி.வடக்கில் கடந்த 25 வருடகாலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த 1000 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு உள்ளது. அதில் கடந்த 11 ம் திகதி காங்கேசன்துறை தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டது.


அவ்வாறு அன்றைய தினம் விடுவிக்கப்பட்ட பகுதியில் வீட்டு உரிமையாளர் ஒருவருக்கு ஒரு அடி காணியே கிடைத்துள்ளது. குறித்த வீட்டு உரிமையாளரின் வீட்டின் முன் பகுதியில் ஒரு அடியே விடுவிக்கப்பட்டு உள்ளது. வீட்டின் ஏனைய பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ளது.

குறித்த வீடு , கூரை மற்றும் யன்னல்கள் கதவுகள் அற்ற நிலையில் காணப்பட்டாலும் வீடு பெரியளவிலான சேதங்கள் இன்றி காணப்படுகின்றது.வீட்டின் மேல் இராணுவ காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு இருந்துள்ளது அதற்கு சாட்சியமாக வீட்டின் மேல் ப்ளாட்டில் மண் மூட்டைகள் அடுக்கப்பட்டு காணப்படுகின்றது.என தெரிவித்தார்