நரேந்திர மோடியின் இலங்கை கொள்கைக்கு பா.ஜ.க வரவேற்பு
அந்த கட்சியின் தேசிய மாநாடு பெங்களுரில் நடைபெறுகிறது. இதன் போது இந்தியாவின் புதிய வெளிவிவகார கொள்கை தொடர்பான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்தில், கடந்த காலங்களில் இந்திய அரசாங்கத்தினால் இலங்கை தொடர்பிலான கொள்கையில் சிக்கல்கள் காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனை திருத்துவதற்கு மோடி மேற்கொண்ட முயற்சிகள் வரவேற்கப்பட்டுள்ளன. அத்துடன், இலங்கையில் கூட்டு சமஸ்ட்டி முறையில் அரசியல் தீர்வு காண மோடி பரிந்துரைத்தமை, 13ம் திருத்தச் சட்டத்துக்கு அப்பால் செல்லுமா வலிறுத்தியமை போன்ற விடயங்களும் பாராட்டப்பட்டுள்ளன.








